அவ்வப்போது சமைக்கும் அன்று பாவ் பாஜி எங்கள் வீட்டில் குழந்தைகளின் கொண்டாட்டம் ஆகிப்போகிறது.... ரெசிபி இதோ ...
தேவையான பொருட்கள் :
வேக வைக்க :
தோல் சீவி நறுக்கிய உருளைக்கிழங்கு - 2
நறுக்கிய பீன்ஸ் ,கேரட் - 1 கப்
பச்சை பட்டாணி - 1/ 4 கப்
மசாலா செய்ய :
வெண்ணெய் - 5 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 பெரியது
சீரகம் - 1 ஸ்பூன்
தக்காளி -2
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 1/4 ஸ்பூன்
மல்லித்தூள் -1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
டோஸ்ட் செய்ய :
buns - 10 pieces
செய்முறை :
- வேகவைக்க கொடுக்கபட்டவற்றை உப்பு , தண்ணீர் செய்து ,குக்கரில் 6-7 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் .
- பின்னர் pan ல் வெண்ணெய் விட்டு ,உருகியதும் சீரகம் சேர்த்து,பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
- இதனுடன் இஞ்சி பூண்டு விழுது ,சேர்த்து மீண்டும் வதக்கவும் .
- இதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் .
- பின் தக்காளியும் சேர்த்து ,அது நன்கு மசியும் வரை வதக்கவும்..
- இதனுடன் மல்லித்தூள் ,மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் , கரம் மசாலாத்தூள் , உ[ப்பு ,சேர்த்து கிளறவும் .
- இதனுடன் வேக வைத்த காய்கறிகளை சற்று மசித்து சேர்க்கவும் .
- மசாலா நீர்க்கவும் இல்லாமல் , கெட்டியாகவும் இல்லாமல் வேக வைத்த நீர் சேர்த்துக் கொள்ளவும் .
- உப்பு . காரம் சரி பார்த்துக் கொள்ளவும் .
- மல்லித்தழை , வெண்ணெய் சேர்த்து மீண்டும் கிளறி விடவும்
- மசாலா தயார் ...
- bun ஐ இரண்டாக வெட்டி வெண்ணெய் தடவி , தோசை கல்லில் இருபுறமும்டோ ஸ்ட் செய்து எடுக்கவும்
- மசாலா , நறுக்கிய வெங்காயம் , bun உடன் சூடாக பரிமாறவும் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....